மேலும் ஒன்றுபட்ட மக்கள் –
மேலும் வலிமையான சிங்கப்பூர்
இயல் 9
சிங்கப்பூரின் ஆகப் பெரிய பலம், ஒற்றுமையே! அது இல்லாவிடில், நாம் இந்த அளவு முன்னேற்றத்தை அடைந்திருக்க மாட்டோம். பிரச்சினைகள் நிறைந்த ஓர் உலகில், நாம் ஒற்றுமையாக, ஒரு மக்களாக இருக்கவேண்டும்; சவால்களை எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்கவேண்டும்; எல்லோருக்கும் உரிய ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கவேண்டும் – இத்தகைய ஒற்றுமை முன் எப்போதும் இல்லாத அளவு, இப்போது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகத் திகழ்கிறது.
நமது ஒற்றுமையை மீள்வலியுறுத்த, எங்கள் உறுதி
- சிங்கப்பூர் அடையாளத்தை வலுப்படுத்துவோம்
- நமது பல்லின, பல சமயம் மிகுந்த சமுதாயத்தைக் கட்டிக் காப்போம்
- ஒருங்கிணைப்பு முயற்சிகளை மேம்படுத்துவோம்
- சிங்கப்பூரை அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றின் நீரோடையாக நிலைபெறச் செய்வோம்
நாம் ஒரு சமுதாயத்தை உருவாக்குவோம். அங்கு:
- எல்லோருக்கும் மரியாதை இருக்கும்
- எல்லோரும் மதிக்கப்படுவர்
- யாரும் பின்தங்கிவிட மாட்டார்கள்
நாம் நமது சமுதாய இணக்கத்தைப் புதுப்பிப்போம். ஒன்றிணைந்து, நாம் ஒருவரோடு ஒருவர் ஒவ்வொருவருக்காகவும் மேலும் பணியாற்றுவோம்.
எங்கள் உறுதி
- மேலும் வலுவான கொடைப் பண்பை ஊக்குவிப்போம்
- தேவையுடையோருடன் நன்கொடையாளர்களையும் தொண்டூழியர்களையும் மேம்பட்ட முறையில் இணைப்போம்
- குடிமக்கள் பங்கேற்புக்கான மேலும் பல தளங்களை உருவாக்குவோம்
- மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் மேலும் பல ஒத்துழைப்புகளை ஊக்குவிப்போம்

கடந்த 60 ஆண்டாக, மக்கள் செயல் கட்சிமீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி.
உங்கள் ஆதரவின்றி நம் சிங்கப்பூர்க் கதை சாத்தியம் அன்று.
உலகம் எவ்வாறு மாறினும், மக்கள் செயல் கட்சி உங்களோடு உங்களுக்காக எப்போதும் உடன் இருக்கும்.
இந்தத் தேர்தல் அறிக்கை, உங்கள் கருத்துகளையும் சிந்தனைகளையும் கொண்டு இயற்றப்பட்டுள்ளது. சிங்கப்பூரை முன்னெடுத்துச் செல்வதற்கான நமது ஒருமித்த இலக்கு இது.
அன்புகூர்ந்து, மக்கள் செயல் கட்சிக்கு வாக்களியுங்கள். அப்போதுதான் உங்கள் எண்ணங்களை எங்களால் செயற்படுத்தமுடியும்; நமது இலக்கை உயிர்பெறச் செய்யமுடியும்.
ஒன்றிணைந்தால், நாம் நம் எதிர்காலத்திற்கான நம்பிக்கையும் ஆக்கபூர்வ சிந்தனையும் கொண்டு முன்னேறிச் செல்வோம்.
மக்கள் செயல் கட்சிக்கு வாக்களியுங்கள்