விறுவிறுப்பான நகரம்
மேலும் நீடித்த நிலைத்தன்மையுடைய வாழ்க்கை
இயல் 7
“நாம் பயணங்களை மேலும் விரைவாக, பசுமையாக, தடையற்ற ஒன்றாக உருமாற்றுவோம். பத்தில் எட்டுக் குடும்பங்கள், ரயில் நிலையம் ஒன்றுக்குப் பத்து நிமிட தூரத்தில் அமைய வகைசெய்வோம்”
பூந்தோட்ட நகராய் இருந்த நாம், இயற்கையில் ஒரு நகரமாய் மலர்ந்துள்ளோம். இப்பொழுது, பசுமை வாழ்க்கையை ஒரு வாழ்வியல் முறையாக நிலைநாட்டுவோம்.
நாம் கரிம வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளைத் தொடர்வோம்; 2050 ஆண்டுக்குள் அதனை முற்றிலும் நீக்கிடுவோம். அதன்மூலம் வருங்காலத் தலைமுறைகளுக்கு மேலும் தூய்மையான, பசுமையான சிங்கப்பூரைப் பத்திரப்படுத்த முனைவோம்.

எங்கள் உறுதி நாம் பின்வருபனவற்றை விரிவுபடுத்தவுள்ளோம்:
- இயற்கையுடனான நமது தொடர்புகளை வளப்படுத்தும் வகையில் பசுமை வளாகத்துடன் கூடிய, 25 புதிய பூங்காக்கள்; 50 கிலோமீட்டருக்கும் அதிகமான பூங்கா இணைப்புப் பாதைகள்; சிகிச்சைமுறை அம்சங்கள் பொதிந்த 13 புதிய நந்தவனங்கள்
- லஸாரஸ் சவுத், குசு பவளப்பாறை ஆகியவற்றில் இரண்டாவது கடல்சார் பூங்கா
எங்கள் உறுதி
வெள்ள மீள்திறன், நில மீட்பு, மறுமேம்பாடு ஆகியனவற்றை ஒருங்கிணைத்து, உயரும் கடல் மட்டத்திலிருந்து சிங்கப்பூரைப் பாதுகாக்கும் அதேவேளையில், அழகான நீர்முகப்பு வாழ்வியலையும் உருவாக்குவோம். நெடுஞ்சாலைத் தீவு, தென் நீர்முகப்பு ஆகியவை அவற்றுள் அடங்கும்.
எங்கள் உறுதி
நாம் பயணங்களை மேலும் விரைவாக, பசுமையாக, தடையற்ற ஒன்றாக உருமாற்றுவோம். பத்தில் எட்டுக் குடும்பங்கள், ரயில் நிலையம் ஒன்றுக்குப் பத்து நிமிட தூரத்தில் அமைய வகைசெய்வோம்:
- புதிய ஜூரோங் வட்டார ரயில் பாதை, குறுக்குத் தீவு ரயில் பாதை ஆகியவற்றைக் கட்டுவதுடன், தற்போதுள்ள ரயில் பாதைகளை விரிவுபடுத்துவோம்
- பேருந்துச் சேவைகளை விரிவுபடுத்தி, மேம்படுத்துவோம்