மூத்தோருக்கு –
நிதி உத்தரவாதமும் மன நிம்மதியும்
இயல் 4
“மூத்தோரை அவர்களின் பொற்காலத்தில் பேணும் பொருட்டு, மக்கள் துடிப்பாக நடமாடுவதற்கு ஏதுவாக, மேலும் அதிகமான துடிப்பாக முதுமையடையும் நிலையங்களைக் கட்டுவோம்.”
மூத்தோர் தங்கள் பொற்காலத்தில் போதுமான நிதி வளங்களையும் மன நிம்மதியையும் கொண்டு மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதே நம் விருப்பம். மூத்தோரின் நிதி நிலைமையை மேம்படுத்த, நாம் மாஜுலா தொகுப்புத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்; வேலைநலன் துணை வருமானத் திட்டம், மூத்தோர் ஆதரவுத் திட்டம் ஆகியனவற்றை மேம்படுத்தியுள்ளோம். உங்கள் முதிய உறவினர்களுடைய மத்திய சேமநிதிக் கணக்கு, பணி ஓய்வுக்காலக் கணக்கு ஆகியவற்றில் நீங்கள் தொகை நிரப்ப ஊக்குவிக்கும் வகையில், வெள்ளிக்கு வெள்ளி அடிப்படையிலான இணை நிதியையும் வழங்கினோம்.

நாம் மூத்தோருக்குக் கூடுதல் உத்தரவாதத்தையும் பாதுகாப்பையும் அளிப்போம்:
எங்கள் உறுதி
- தொடர்ந்து வேலை செய்ய விரும்பும் மூத்தோருக்கு ஆதரவாக, மறு-வேலை நியமன வயதை உயர்த்துவோம்
- மூத்த ஊழியர்களுக்கான மத்திய சேமநிதிப் பங்களிப்பு விகிதங்களை அதிகரிப்போம்
- மூத்தோரை வேலைக்கு அமர்த்தி, தக்கவைத்துக்கொள்ள முதலாளிகளுக்கு ஊக்குவிக்கும் வகையில், சம்பளங்களுக்கு இணை நிதியை வழங்குவோம்
- பணி ஓய்வுக்காலத்திற்கான நமது மத்திய சேமநிதிக் கட்டமைப்பை மறுபரிசீலனை செய்து, மேம்படுத்துவோம்
- மத்திய சேமநிதி மெடிசேவ் கணக்குகளில் சுய விருப்பத்தின் பேரில் போடப்படும் நிரப்புத்தொகைகளுக்கு இணை நிதி வழங்குவோம்
மூத்தோரை அவர்களின் பொற்காலத்தில் பேணுவோம்:
எங்கள் உறுதி
- மக்கள் துடிப்பாக நடமாடுவதற்கு ஏதுவாக, மேலும் அதிகமான துடிப்பாக முதுமையடையும் நிலையங்களைக் கட்டுவோம்
- நீண்டகாலப் பராமரிப்பு தேவைப்படும் மூத்தோருக்கான நிதியுதவிகளை அதிகரிப்போம்
- வீட்டிலேயே முதுமையடைய விரும்புவோருக்கான புதுவகை பராமரிப்பு முறைமைகளை உருவாக்குவோம்
- நம் குடும்பங்களின் விடிவெள்ளியாகத் திகழும் பராமரிப்பாளர்களுக்கான ஆதரவை வலுப்படுத்துவோம்