முன்னுரை

அன்பார்ந்த சக சிங்கப்பூரர்களே,

நாம் இவ்வாண்டின் தொடக்கத்திலிருந்து கொவிட்-19 கிருமிப் பரவலுடன் போராடி வருகிறோம். இந்தக் கடுமையான போராட்டத்தில் அனைவரும் முனைப்புடன் ஈடுபட்டிருக்கின்றனர். கிருமிப்பரவலைத் தடுத்து உயிர்களைக் காக்க, நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டம் உள்ளிட்ட வலுவான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டோம்.

இப்போது, குடும்பங்களும் நண்பர்களும் மீண்டும் சந்திக்கிறார்கள். கடைகளும் உணவகங்களும் படிப்படியாக மீண்டும் திறக்கப்படுகின்றன. வர்த்தகங்கள் மீண்டும் பணிகளைத் தொடங்கியுள்ளன. எல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மேற்கொள்ளப்படுகின்றன.

நமது பொருளியல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் அடுத்தடுத்து நான்கு வரவுசெலவுத் திட்டங்களைச் செயற்படுத்தியிருக்கிறோம். இருப்புநிதியிலிருந்து எடுக்கப்பட்ட கடந்தகாலச் சேமிப்புடன், கிட்டத்தட்ட $100 பில்லியன் செலவு செய்கிறோம். நிறுவனங்கள், ஊழியர்கள், குடும்பங்கள் இந்த இக்கட்டான காலகட்டத்தைக் கடந்துசெல்ல உதவுவதே எங்கள் இலக்கு.

ஆனால், இந்த நெருக்கடி இன்னும் முடியவில்லை. சில நிறுவனங்கள் தாக்குப்பிடிக்க மாட்டா. ஆட்குறைப்பும் வேலையின்மையும் வெகுவாக அதிகரிக்கும். தடுப்பூசி தயாராவதற்குக் குறைந்தது ஓராண்டு அல்லது அதைவிட அதிக காலமாகலாம்.

கொவிட்-19 கிருமிப்பரவலுக்கு எதிரான நமது போராட்டத்தை நாம் தொடரும் வேளையில், வேலைகளைக் காப்பதே எங்களது தலையாய முன்னுரிமையாக இருக்கிறது.

மக்களை வேலையில் வைத்திருக்கவும், வேலை இழந்தவர்கள் மாற்றுவேலைகள் தேட உதவவும், பொது மற்றும் தனியார் துறைகள் இரண்டிலும் புதிய வேலைகளையும் வேலைப்பயிற்சித் திட்டங்களையும் உருவாக்கவும் தேசிய அளவிலான முயற்சியை நாங்கள் தொடங்கி இருக்கிறோம்.

கொவிட்-19 நெருக்கடிக்குப் பிறகு, உலகம் மிகவும் மாறுபட்டிருக்கும். அவ்வுலகில் நாம் வலுவுடன் மீண்டெழுவதற்கு, இதுவரை நாம் செய்து வந்ததைப் பயன்படுத்திக் கொண்டு மேலும் அதிக முனைப்புடன் செயற்படவேண்டும்.

நாம் எதிர்காலப் பொருளியலுக்குத் தயார்ப்படுத்திக் கொண்டும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் மூலம் சிங்கப்பூரர்களை மேம்படுத்தியும் வருகிறோம். நம் நகரையும் நம் இல்லங்களையும் மேம்படுத்துகிறோம். உங்களின் தொடக்கநிலை எதுவாக இருந்தாலும், உங்களுக்குத் தரமான கல்வி, சுகாதாரப் பராமரிப்பு, வீட்டுவசதி ஆகியவற்றோடு வாழ்க்கையில் சிறக்க முழு வாய்ப்புக் கிடைப்பதையும் நாங்கள் உறுதிப்படுத்துவோம். நம் சமுதாயத்தில் யாரும் பின்தங்கிவிடாதிருக்க, எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களை நாங்கள் எப்போதும் கவனித்துக் கொள்வோம். ஒன்றிணைந்த சிங்கப்பூர் இயக்கத்தின் மூலம், சிங்கப்பூரை மேன்மேலும் சிறப்பாக்க நாங்கள் நம் மக்களின் யோசனைகளையும் ஆற்றல்களையும் பயன்படுத்துகிறோம்.

வரும் மாதங்களிலும் ஆண்டுகளிலும், நாம் சிரமமான பல சூழ்நிலைகளையும் முடிவுகளையும் எதிர்நோக்குவோம். நம்மைப் பாதுகாப்பாக வழிநடத்திச்செல்ல, ஒருவர் மீது ஒருவர் முழு நம்பிக்கை கொண்டுள்ள, மனத்திடம் கொண்ட ஒற்றுமையான மக்களுடன் அணுக்கமாகப் பணியாற்றும் ஆற்றலும் கடப்பாடும் கொண்ட தலைமைத்துவ அணி நமக்குத் தேவை.

வரும் மாதங்களிலும் ஆண்டுகளிலும், நாம் சிரமமான பல சூழ்நிலைகளையும் முடிவுகளையும் எதிர்நோக்குவோம். நம்மைப் பாதுகாப்பாக வழிநடத்திச்செல்ல, ஒருவர் மீது ஒருவர் முழு நம்பிக்கை கொண்டுள்ள, மனத்திடம் கொண்ட ஒற்றுமையான மக்களுடன் அணுக்கமாகப் பணியாற்றும் ஆற்றலும் கடப்பாடும் கொண்ட தலைமைத்துவ அணி நமக்குத் தேவை.

உங்கள் சார்பாக உறுதியாகச் செயற்படவும், நம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உங்களுடன் சேர்ந்து பணியாற்றவும், நமது பேரார்வங்களைப் பூர்த்தி செய்யவும், அரசாங்கத்திற்குப் புதிய கட்டளையும் முழுத் தவணைக் காலமும் தேவைப்படுகிறது.

இதனால்தான் நான் பொதுத் தேர்தலை அறிவித்தேன்.

மக்கள் செயல் கட்சி நம் வாழ்க்கையை மேம்படுத்தவும், அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருக்கவும், சிங்கப்பூரை முன்னெடுத்துச் செல்லவும், எப்போதுமே உங்களுடன் சேர்ந்து செயற்பட்டிருக்கிறது.

இப்போது நம் வாழ்க்கையும், நம் வேலைகளும், நம் எதிர்காலமும் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு இடருக்கு உள்ளாகியு​ள்ளன.

அன்புகூர்ந்து எனக்கும் எனது மக்கள் செயல் கட்சி அணிக்கும் வாக்களியுங்கள். நாம் ஒன்றிணைந்து கொவிட்-19 கிருமிப்பரவலை முறியடித்து, நமக்கும் நமது பிள்ளைகளுக்கும் இன்னும் ஒளிமயமான எதிர்காலத்தை அமைத்திடுவோம்.

உங்கள் உளமார்ந்த

மக்கள் செயல் கட்சி தலைமைச் செயலாளர்

அடுத்தது

சுகாதாரம் & பாதுகாப்பு

வேலைகள் & பொருளாதாரம்

அன்புள்ளம்

நம்பிக்கை

ஒன்றிணைந்து

வாழ்நாளின் ஆகப்பெரிய நெருக்கடியை எதிர்கொள்வோம்

அடுத்தது ⮞

எங்கள் கொள்கை அறிக்கையின் ஒரு பிரதியைப் பெற

பதிவிறக்குஇணையத்தில் காட்டு