மேலும் கட்டுப்படியான பொது வீடமைப்பு
கூடுதல் தெரிவுகள்
இயல் 6
“அடுத்த மூவாண்டில், 50,000க்கும் அதிகமான புதிய வீடுகளைக் கட்டித் தருவோம் – ஒட்டுமொத்த அங் மோ கியோ வட்டாரத்திற்கு நிகராக”
ஒவ்வொரு சிங்கப்பூரரும் உயர் தரமான, கட்டுப்படியான வீடு வாங்கும் வாய்ப்பைப் பெற்றிருப்பர். கொவிட் பெருந்தொற்றினால், நமது வீட்டுத் திட்டங்கள் பின்னடைவை எதிர்கொண்டன. ஆனால், 2021 முதல் 2025 வரையில் 100,000 வீவக வீடுகளை அறிமுகப்படுத்த, நாங்கள் திட்டமிட்டபடி செயல்பட்டு வருகிறோம்.
பொது வீடமைப்பைக் கட்டுப்படியாகவும், எளிதில் கிடைக்கக்கூடியதாகவும் வைத்திருக்க, நாங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம்:

ஓவியரின் கைவண்ணம் : காலாங் - வாம்ப்போ வீடமைப்புப் பேட்டையில் பொதுப்படையான முறையில் அமையப்பெறும் புதிய வீடுகள்
எங்கள் உறுதி
- அடுத்த மூவாண்டில், 50,000க்கும் அதிகமான புதிய வீடுகளைக் கட்டித் தருவோம் – ஒட்டுமொத்த அங் மோ கியோ வட்டாரத்திற்கு நிகராக
- குறைந்த காத்திருப்பு நேரம் உடைய வீடுகளின் எண்ணிக்கையை அதிகரிப்போம்
- அதிக வருமானம் உடைய தம்பதியருக்கும் ஒற்றையருக்கும் உரிய கூடுதல் பொது வீடமைப்புத் தெரிவுகளை உருவாக்குவோம்
- நிலையான, நீடித்து நிலைக்கவல்ல சொத்துச் சந்தையை ஊக்குவிக்க, தேவைப்படும் சமயங்களில் தீர்க்கமான முடிவுகளை எடுப்போம்
- விருப்புரிமை அடிப்படையில் முன்கூட்டியே மேற்கொள்ளப்படும் மறுமேம்பாட்டுத் திட்டத்தின்வழி வீவக பேட்டைகளின் புதுப்பிப்புப் பணிகளைத் திட்டமிடுவோம்
புதிய வீவக வகைப்பாட்டு முறை – Standard, Plus, Prime வீடுகள் – குறிப்பிட்ட இடங்களில் உள்ள வீவக வீடுகள் அதிகமான விண்ணப்பதாரர்களுக்குக் கட்டுப்படியான விலையில் கிடைப்பதை உறுதிசெய்யும். பின்வரும் புதிய வீடமைப்புப் பேட்டைகளும் அவற்றில் அடங்கும்:
- காலாங் – வாம்ப்போ: வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீட்டைத் தங்கள் விருப்பத்திற்கேற்ப வடிவமைத்துக்கொள்ளும் நீக்குப்போக்குத்தன்மையை அளிக்கும் பொதுப்படையான முறையில் அமையப்பெற்ற முதல் வகை வீடுகள்
- பேஷோர்: கிழக்குக் கடற்கரைப் பூங்காவில் நீர்முகப்புடன் கூடிய வாழ்க்கைமுறை
- மவுண்ட் பிளசண்ட்: பழைய காவல்துறைப் பயிற்சிக்கழகத்தின் வளமான மரபுடைமையை உள்ளடக்கிய வகையில்