அதிகமான பாதைகள் –
அதிகமான சாதனைகள்
இயல் 2
“நாம் நமக்கான மிகச் சிறந்த நிலைகளை அடைவதற்குரிய வகையில், கல்வித்துறையைத் தொடர்ந்து மாற்றியமைத்து வருவோம்”
நம்மிடம் துடிப்பானதொரு கல்விமுறை உள்ளது. இருப்பினும், போட்டி மனப்பான்மை மன அழுத்தத்திற்கும் உளைச்சலுக்கும் இட்டுச் செல்லக்கூடும். அதனால்தான், மகிழ்வூட்டும் கற்றலில் கவனம் செலுத்தும் வகையில், ஒவ்வொரு பிள்ளையும் தங்களுடைய ஆற்றல்களைக் கண்டறிந்து மேம்படுத்திக்கொள்ளத் துணைபுரியும் வழியில், நாம் பெருமளவு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளோம்.
மாணவர்களைத் தரம் பிரிக்கும் முறைமை, பாட அடிப்படையிலான வகைப்பாட்டு முறையைக் கொண்டு மாற்றப்பட்டுள்ளது; தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வுமுறைகளும் மீத்திறன் கல்வித் திட்டமும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
நாம் நமக்கான மிகச் சிறந்த நிலைகளை அடைவதற்குரிய வகையில், கல்வித்துறையைத் தொடர்ந்து மாற்றியமைத்து வருவோம்:
- ‘வெற்றி’ குறித்த எண்ணப்போக்கை விரிவுபடுத்துவோம்
- பல்வேறு திறமைகளையும் ஆர்வங்களையும் ஈடுசெய்யும் வகையில் கல்விமுறையைப் பண்படுத்துவோம்
- நம் ஆசிரியர்களின் தொழில்சார் மேம்பாட்டில் முதலீடு செய்வோம்
- முழுமையான கல்வியை வழங்க பெற்றோர், தொழில்துறை, சமூகம் ஆகியோருடன் கைகோப்போம்

சிறப்புத் தேவையுடைய மாணவர்களுக்கு, நாம் ஆதரவளிப்போம்:
- 2030க்குள் சிறப்புத் தேவையுடையோருக்கான நான்கு புதிய பள்ளிகள் கட்டப்படும்
- வளர்ச்சித் தேவைகள் உடைய பிள்ளைகளுக்கு மேலும் அதிகமான ஆரம்பகாலத் தலையீட்டு நிலையங்களை நிறுவுவோம்
- மேலும் அதிகமான பாலர்பள்ளிகளுக்குக் கற்றல் ஆதரவுத் திட்டங்களை (வளர்ச்சி ஆதரவு) விரிவுபடுத்துவோம்
பள்ளிகளுக்கு அப்பால், ஸ்கில்ஸ்ஃபியூச்சர் மூலம், நாம் ஒவ்வொரு சிங்கப்பூரரிடத்திலும் முதலீடு செய்கிறோம்:
- சிங்கப்பூரர்கள் திறன்களை மேம்படுத்திக்கொண்டு, புதுப்பித்துகொண்டு தங்கள் வாழ்க்கைத்தொழிலில் முன்னேறத் துணைபுரிவோம்
- நிறுவனங்கள் வேலைகளை மறுவடிவமைக்கவும் ஊழியர் பயிற்சியில் முதலீடு செய்யவும் ஆதரவளிப்போம்
- வேலை தேடுவோருக்கான ஆதரவுத்திட்டம்வழி (ஸ்கில்ஸ்ஃபியூச்சர்) வேலை இழந்த சிங்கப்பூரர் மீண்டு வருவதற்குத் துணைபுரிவோம்